பாண்டி ஆட்டம் போட்ட கால்கள்
இன்று நொண்டியாட்டம் போடும்
எலும்பைக் கட்டிப்பிடித்த தசைகள்கூட
ஊடல் செய்யும் நேரம்
பருவம்வந்த பெண்ணைக் கூட
பார்க்கும் பார்வை மாறும்
நெஞ்சம் நிறைந்த நினைவுகளை
வாய் நித்தம் அசைபோடும்
இரவும் பகலும் ஓயாமல்
இருமல் உயிரிருப்பதை பறைசாற்றும்
நித்தம் சோறின்றி பயிர்போல்
நீரால் உடல் வாழும்
குட்டிபோட்ட குட்டியை காக்க
காலம் கழிந்து போகும்
சுவரில் ஓவியம் ஆகும்வரை
சிலையென மூலையில் வாழுமிவர்க்கு
மருமகளிடம் உரிமையுரைத்தால் எங்ஙனம்
மௌன விரதம் கலைந்து கத்தியகுயிலுக்கு
காக்கைக்கூட்டில் இடமில்லையோ அதுபோல்
மகன்வீடின்றி முதியோர் இல்லத்தில் தானேவாழ்வு!!!
இன்று நொண்டியாட்டம் போடும்
எலும்பைக் கட்டிப்பிடித்த தசைகள்கூட
ஊடல் செய்யும் நேரம்
பருவம்வந்த பெண்ணைக் கூட
பார்க்கும் பார்வை மாறும்
நெஞ்சம் நிறைந்த நினைவுகளை
வாய் நித்தம் அசைபோடும்
இரவும் பகலும் ஓயாமல்
இருமல் உயிரிருப்பதை பறைசாற்றும்
நித்தம் சோறின்றி பயிர்போல்
நீரால் உடல் வாழும்
குட்டிபோட்ட குட்டியை காக்க
காலம் கழிந்து போகும்
சுவரில் ஓவியம் ஆகும்வரை
சிலையென மூலையில் வாழுமிவர்க்கு
மருமகளிடம் உரிமையுரைத்தால் எங்ஙனம்
மௌன விரதம் கலைந்து கத்தியகுயிலுக்கு
காக்கைக்கூட்டில் இடமில்லையோ அதுபோல்
மகன்வீடின்றி முதியோர் இல்லத்தில் தானேவாழ்வு!!!